சிறிலங்காப் படையினரின் கிளை, தாக்குதலில் உதவி அரச அதிபர் படுகொலை.
ஜூன்29, 2008 at 4:52 பிற்பகல் | In 1 | Leave a Comment[ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:59 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காயில் இன்று சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
துணுக்காய் பிரிவில் உள்ள அம்பலப்பெருமாள்குளத்துக்கும் கோட்டைகட்டினகுளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணியளவில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர்த் தாக்குதலை நடத்தினர்.
இத்தாக்குதலில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த துணுக்காய் உதவி அரசாங்க அதிபரான நாகலிங்கம் நந்தகுமார் (வயது 36) என்பவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
கிளிநொச்சியில் உள்ள அக்கராயன், கந்தபுரத்தைச் சேர்ந்த இவர், துணுக்காய் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே தாக்குதலுக்கு இலக்கானார்.
No Comments Yet »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
மறுமொழியவும்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.
























