நிமிடம் தோறும் புதிய செய்திகள்


இங்கே அழுத்துக CLICK TO CZRRENT NEWS

இங்கே அழுத்துக CLICK TO CURRENT NEWS

சீனாவுடன் நட்பிற்கான போர், இலங்கையையும் அடக்குவோம்!


வின்சென்ற் ஜெயன்

இந்தியாவினதும் சீனாவினதும் கலை கலாச்சாரம் பண்பாடுகள் நெருக்கமானவை ஆகவே நண்பர்களாகவே இருக்க வேண்டும், யுத்தம் செய்து சீனாவை நண்பனாக்குவோம் என்று கூறும் சுப்பிரமணிய சுவாமிக்கு ஈழத்தமிழர்கள் வேற்றுக்கிரகவாசியாகவா தோன்றுகின்றது. மேலும் அவர் “தமிழ் விசர்கள் புலிகள்” என்று கேவலமாக பேசுவதை செவ்வி காணும் ஆர்.எஸ்.எஸ் இன் எடுபிடியும் பார்பனியனும், அதன் கைக்கூலியுமான பாண்டே அக்கருத்தை குறுக்கிடவில்லை அது மட்டுமல்ல பா.ஜா.க வின் ஊதுகுழல் என்பதை அவ் யூரியூப் செவ்வி முழுவதுமே வெளிக்காட்டியது. (மேலும்)

அறியாமல் இருப்பது ஏன்?


வின்சென்ற் ஜெயன்

இந்த 666 என்பது என்ன? நாம் பயன்படுத்தும் சில இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் மென் பொருட்களில் இவ் எண் உள்ளடக்கப்பட்-டுள்ளது. அதாவது தகவல் தொழில்நுட்பதுறையில் ”w”என்ற ஆங்கில எழுத்திற்கு”6″என்று அர்த்தம் இலத்திரனியல் செயற்பாட்டுக்கு எழுதும் குறியீடுகளில் அடிப்படையில் 3 தடவை”w”இருந்தேயாக வேண்டும், குறிப்பிட்ட தொழில்நுட்ப சாதனம் (வன்பொருள் அல்லது மென்பொருள்) மேம்படுத்தும் போது அடிப்படையில் இருக்கும்”w”ற்குப்பதிலாக வேறு எழுத்துக்களை பயன்படுத்துவார்கள். மனிதனுக்குள் புகுத்தப்படும் இலக்கம் என்பது இலக்கமாக அல்ல சிறியரக வன்பொருளாக அமையும். இன்றைய பாவனையிலுள்ள அரிசி ரக அட்டைக்குப் பதிலாக மனித உடம்பிலுள்ள இலத்திரனியல் சக்தியைக் கொண்டு மனிதருக்கு முத்திரையிடுவார்கள் என்பது எனது கணிப்பு அதைநோக்கியே தகவல்தொழில்நுட்பமும் வளர்ந்து செல்கின்றது.  (மேலும்)

One Year வருடம் ஒன்று Ein Jahr


One year வருடம்ஒன்று Ein Jahr

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் கற்பனைச் செய்திகளின் தொகுப்பு:-


வின்சென்ற் ஜெயன்

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைப்பது சர்வசாதாரணம்  அவர்களின் முகமது நபி மரணவேளையில் கிறிஸ்தவர்கள் மீதும் யூதர்கள் மீதும் சாபமிட்டு சொத்ததுதானவரலாறு, இத்தாக்குதலை ஸ்ரீதலதாமாளிகை தாக்குதலுடன் ஒப்பிட முடியாது, (மேலும்)

 

குண்டுக்கு மேல் குண்டுகள்


வின்சென்ற் ஜெயன்

மீண்டும் இலங்கையில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்த ராஜபக்க்ஷக்கள் சதிகளில் ஈடுபட்டுள்ளனர் … நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவ புரட்சியை ஏற்படுத்தியாவது நாட்டின் அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பதில் தீர்க்கமாக நிற்கின்றனர் என்பது தெளிவாகின்றது…

ஆகக் கூடியது வவுணதீவு சந்தேகநபராக முன்னர் இனம் காணப்பட்ட கிளி-வட்டக்கச்சியைச் சேர்ந்த ராசநாயகம் சர்வானந்தனிடம் அரசு மன்னிப்புக் கேட்குமா? நட்டஈடுதான் கொடுக்குமா?

இலங்கை காவல் துறை தனது வரலாற்றில் உள்ளுர் பயங்கரவாதி ஒருவரையும் சர்வதேச பயங்கரவாதிளையும் உருவாக்கியுள்ளது பாரட்டப்படவேண்டியது. (மேலும்)

மீண்டும் ஓர் சிலுவைப்போர்!


வின்சென்ற் ஜெயன்

அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதி டெனால்ட் ரம் முஸ்லிம்களுடன் கடும்போக்கு தன்மையில் நடந்துகொள்வது தொடர்பாக, கடந்த 30வருடங்களுக்கு மேலாக இனங்களுக்கிடையிலான போரில் பாதிக்கப்பட்டவன் என்ற முறையிலும் கிறிஸ்தவன் என்ற அடிப்படையிலும்  எனது கருத்தை பதிவிடுகின்றேன். (மேலும்)

ஊடகர்களின் சமூகப் பொறுப்பு


சண் தவராஜா

சமூகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகங்கள் இன்றைய மனித வாழ்வியலில் இன்றியமையாதவையாக விளங்கி வருகின்றன. பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு விதமான வடிவங்களில் மனித வாழ்வியலில் பங்கேற்று வந்த இந்த ஊடகங்கள் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத் தளங்கள் என பரிணாமம் கண்டுள்ளன. முறையான ஊடகங்களுக்கு அப்பால் சமூக ஊடகங்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் முகநூல், ‘வட்ஸ் அப், டுவிட்டர், யூ டியூப்” போன்றவை வரையறைகளை உடைத்து உண்மைகளை, தணிக்கைகள் எதுவுமின்றி உடனடியாகவே உலகின் கண்கள் முன் நிறுத்தி வருகின்றன. Continue reading

ஜி. நடேசன் நினைவு ம் இன்றைய யதார்த்தமும்


சண் தவராஜா

ஈழத் தமிழ் மக்களின் நலவாழ்வை வெகுவாக விரும்பிய ஊடகவியலாளர் ஜி. நடேசன் எம்மைவிட்டுப் பிரிக்கப்பட்டு 12 வருடங்கள் கடந்து விட்டன. பிரிவுத் துயரால் துவண்டுபோன அவரது குடும்பத்தினரதும் அவரை மானசீகமாக நேசித்த அவரது நண்பர்களினதும் துயரம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. நடேசன் அவர்களின் படுகொலையோடு ஆரம்பமான மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் தற்போதுதான் – 12 வருடங்களின் பின்னர் – ஓரளவு குறையத் தொடங்கியுள்ளது. அதன் விளைவாக முதன்முறையாக அவருக்கான அஞ்சலி நிகழ்வொன்று அவர் பெரிதும் நேசித்த மட்டக்களப்பு மண்ணில் நிகழ்த்தப் பட்டிருக்கிறது. Continue reading

தாய்த் தமிழக உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டுவோம்


சிவராம் ஞாபகார்த்த மன்றம்

தாய்த் தமிழகத்தின் சென்னை மற்றும் கட
லூர்  மாவட்டங்களிலும்,  தாயகத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏற்பட்டுள்ள தீவிர பருவமழைத் தாக்கம் புலம்பெயர் தமிழ் மக்களை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. இயற்கையின் சீற்றம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பழிவாங்குகின்றதோ என நினைக்கத் தோன்றும் வகையில் நிலைமைகள் உள்ளன. Continue reading

தேவையில்லாத தேர்தலும்! நெளிவுகளின் தெளிவும்!


வின்சென்ற் ஜெயன்

பருவமழை பொழியுதோ இல்லையோ? இலங்கையில் தேர்தல் நிச்சயம்.

காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து இலங்கையில் நடைமுறையில் இருப்பதாக கூறப்படும் ஜனநாயக முறையிலான தேர்தல் மக்களுக்காகவா? அல்லது அரசியல் வாதிகளுக்காகவா? இலங்கையில் ஜனநாயகம் என்பது இருந்தால் பாராளுமன்றம் கலைக்கப்படும் அவசியம் ஏற்படாது? தற்போது நிகழவிருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் ராஜபக்சக்களுக்கு மீண்டும் நாட்டில் நன்மதிப்பளிப்பதற்காகவே என்பது உண்மையான உண்மை. அடிக்கடி நிகழ்த்தப்படும் தேர்தல்களினால் நாட்டின் பொருளாதாரம் எங்கு செல்லும், தேர்தல்களை முன்னிட்டு பல செயற்திட்டங்களும், மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வளங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் அல்லது தேர்லுக்காக பயன்படுத்தப்படும் என்பதை யாவரும் அறிந்ததே. அதனால் சாதாரன ஒரு மனிதனின் வாழ்வு பலவருடங்களை பின்நோக்கி நகர்கின்றதை அனுபவித்து நிற்பவர்களே இலங்கை மக்கள். இப்படியான அவசியமில்லாத தேர்தல்; நடைபெறுவதையோ அல்லது குறித்த காலத்திற்கு முன் பாராளுமன்றம் கலைக்கப்படுவதையோ மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும் அதற்காக குரல் எழுப்பவேண்டும். (மேலும்)

நல்லாட்சி,பத்தோடு பதினொன்று…


வின்சென்ற் ஜெயன்

அன்ரூ சான், மயூரன் சுகுகுமார் மற்றும் சகாக்களின் மரணதண்டணை சம்பவம் எந்தளவிற்கு உலகத்தின் கவணத்தை ஈர்த்ததோ அதே வலுவில் வித்தியாவின் சம்பவமும் முக்கிய கவணத்தை பொற்றுவிட்டது. (மேலும்)

மரணங்களின் அஸ்தமனம்!


1971 மற்றும் 1989 ஆண்டுகளில் ஜே.வி.பியின் கிளர்ச்சிகளின் போது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை கணக்கில் எடுக்காது, இலங்கையில் 2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்த அரசு – புலிகள் யுத்தத்தினை மாத்திரம் நோக்குவோமானால், எல்லா இனங்களையும் சேர்ந்த ஏறத்தாள ஒரு இலட்சம் வரையிலான மனித உயிர்கள் பலி கொள்ளப்பட்டதும், பல இலட்சக் கணக்கானவர்களின் இடப்பெயர்வுகளும், மதிப்பிட முடியாத சொத்துக்களின் அழிவும் இடம்பெற்றுள்ளன. இதற்கு இலங்கை அரச படைகளும், அரச படைகளை எதிர்த்துப்போராடிய ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களும், இந்திய அமைதிப்படையுமே பொறுப்பாளிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அரச படைகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்றைக்கும் பொறுப்புக்கூற இலங்கை அரசு உள்ளது. ஆனால் தமிழ்த்தேசிய இயக்கங்களினதும் இந்திய அமைதிப்படையினதும் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூற இன்று எவருமே இல்லை.

யுத்த முனையில் பலியானவர்கள் மற்றும் யுத்தத்தின் நடுவில் சிக்கி கொல்லப்பட்ட பல்லின பொதுமக்கள் தவிர ‘என்னுடன் உடன்பாடு இல்லாதவன் எனது எதிரியே’ என்ற கோட்பாட்டில் யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்துத் தமிழ் தரப்பினராலும் ‘மரண தண்டனை’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்கள் மூன்று தசாப்த காலமாக பறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு அவ்வப்போது தமது தேவை கருதி உரிமைகள் கோரப்பட்டும் இருக்கின்றன. அதேவேளை உரிமை கோரப்படாமல், ஆனால் ‘இந்தக் கொலையை எந்த தரப்பு செய்திருக்கக்கூடும்’ என்பது மிகவும் வெளிப்படையாக தெரியும் வண்ணமும், சில கொலைகளின் உண்மையான சூத்திரதாரிகள் எமது பொதுவான ஊகங்களை பொய்ப்பிக்கும் வகையிலும், பல ஆண்டுகளாய் இன்னமும் மர்மம் நீடிக்கும் கொலைகள் நிகழ்த்தப்பட்டும், பலர் காணாமலும் போயுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டோ அல்லது காணாமல் போனவர்கள் சிலருக்கு அவ்வப்போது நினவாஞ்சலிகள் செய்யப்படுகின்றன. ஆனால் பெரும்பாலானோர் நினைவு கூரப்படுவது இல்லை. இதனால் எமது நினைவுகளிலிருந்து மறைந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் மரணித்தவர்களுக்கும் காணாமல் போயுள்ளவர்களுக்கும் பொறுப்புக்கூறவும் இன்று எவருமே இல்லை.

ஆரம்பகாலத்தில் புளொட் இயக்கத்திலிருந்து, பின்னர் தமிழ் – ஆங்கில பத்தி ஊடகவியலாளராக உருவெடுத்து, இறுதியில் புலிகளின் முகாமுக்குள் சரணடைந்த தர்மரத்தினம் சிவராம் கொலை செய்யப்பட்டு பத்தாவது ஆண்டினை நினைவுகூரும் கூட்டங்கள் மட்டக்களப்பிலும் சென்னையிலும் நடைபெற்றதுடன், சில தமிழ்த்தேசிய மற்றும் புலிகள் சார்பு ஊடகங்களும் நினைவுக்குறிப்புகளை வெளியிட்டு இருந்தன. சிவராம் கடந்துவந்த பாதையை முழுமையாக சொல்லப்படாது, அவர் ஒரு ‘சிறந்த’ தமிழ் – ஆங்கில பத்தி ஊடகவியலாளராக அல்லது புத்திஜீவியாக சித்தரிக்கப்பட்டு வருகின்றார்.

1983-1987 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் புளொட்டின் ஆயுதப்பயிற்சி முகாம்களில் சில வதைமுகாம்களாக உருமாறி சித்திரவதைகளும் கொலைகளும் நடந்தேறிய போது, சிவராம் அந்த இயக்கத்தின் முன்னணி நபராக இருந்தவர். இவர் ஒருபோதும் புளொட்டினுள் நிகழ்ந்த அராஜகங்களை எதிர்;த்துப் போராடியவரல்ல. மாறாக, புளொட்டின் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களோடே, புளொட் இயக்கம் சிதையும் வரைக்கும் தன்னை வலுவாக இணைத்து இருந்தவர். புளொட்டின் ஜனநாயக மீறல்களை அம்பலப்படுத்தி ‘புதியதோர் உலகம்’ வெளிவந்த பின்னரும், புளொட்டின் தலைவர்களில் ஒருவரான சந்தியார் புளொட் இயக்கத்தால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பின்னரும் அந்த இயக்கத்தை விசுவாசித்தவர். மேலும் புளொட் இயக்க உறுப்பினர்களான அகிலன், செல்வன் ஆகியோரைக் கடத்தி மூதூரில் கொன்று புதைப்பதற்கு நேரடியாக இவர் துணைபுரிந்தவர்.

புலிகளுக்கும் புளொட்டிற்கும் தாயாதிப்பகை. இதனால் 1982இல் புளொட்டின் ஸ்தாபகரில் ஒருவரான சுந்தரம் புலிகளினால் கொல்லப்பட்டார். பின்னர் 1986இல் புளொட் இயக்கம் புலிகளால் தடைசெய்யப்பட்டதோடு பல நூற்றுக்கணக்கான புளொட் உறுப்பினர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு எல்லா தமிழ் ஆயுத இயக்கங்களிலும் பல ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்து புலிகள் ஒரு பெரும் பாசிச இயக்கமாக விருட்சம் பெற்ற பின்னரே, புலிகளுக்குள் சிவராம் பிரவேசித்தார்.

2004 இல் புலிகளிலிருந்து கருணா பிரிந்தபோது கருணாவின் ஆலோசகர் வடிவத்தில் சிவராம் மட்டக்களப்பில் நின்றார். ஆனால் கருணா பிரிந்து ஒரு வாரத்தின் பின்னர் வன்னியில் கால் பதித்த சிவராம், அங்கிருந்து கருணாவின் பிளவை எதிர்த்து அறிக்கைவிட்டார். இதுதான் அவரது குத்துக்கரணத்திற்கு மேல் குத்துக்கரணம் அடிக்கும் தன்மைக்கு ஒரு சிறந்த உதாரணம்.. இவரது இந்த துரோகச் செயலுக்காக கருணா அணியினரே சிவராமை சுட்டுக்கொன்றதாக பல ஊடகவியலாளர்கள் பத்தி பத்தியாக எழுதினார்கள்.

தமிழ் தேசிய விடுதலைப் போரட்ட காலத்தில் இயக்கங்களினுள்; இழைக்கப்பட்ட, இயக்கங்களிடையேயான மோதல்களில் நிகழ்த்தப்பட்ட அராஜகங்கள் யுத்தக்குற்றங்களே. சிவராம் போன்ற மோசமான யுத்தக்குற்றவாளியை ஏதோ சில சக்திகள் நினைவுகூர திட்டமிட்டு செயற்படுகின்றன. ஆனால் தமிழீழ ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களினால் கொல்லப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்போன பல்லின மக்கள், போராளிகள், பத்திரிகையாளர்கள், அரச பணியாளர்கள், சமூக சேவையாளர்கள் கல்விமான்கள், அனைவரின் நினைவாஞ்சலிகளை ஒவ்வொன்றாக அனுஸ்டிக்காவிடினும், அவர்களை நினைவில் வைத்திருப்பதற்கு இன்று மிகச் சொற்பமானோரே எஞ்சியிருக்கின்றனர்.

நன்றி: ஆசிரியர் தலையங்கம் – வானவில் இதழ் 53
https://manikkural.wordpress.com/

மீண்டும் அதே பழைய பல்லவி!


செல்வரட்னம் சிறிதரன்

தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை உள்நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் ஓர் அரசியல் அமைப்பின் கீழ், ஒரே அரசியல் தலைமையின் கீழ் ஒன்று திரண்டிருக்கின்றார்கள் என்பதை காட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் எழத் தொடங்கியிருக்கின்றன. வரப்போகின்ற பொதுத் தேர்தலை முன்னிறுத்தி இந்த வேண்டுகோள்கள், தமிழ் மக்களை நோக்கி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்வைக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. Continue reading

பாரம்பரியத்திற்குள் இருக்கு ம் போதை, ஆக்குமா? அழிக்குமா?


“இதில் இளையவர்களை சுயசிந்தனையற்றவர்களாக உருவாக்கும் போது ஒரினமே தனக்குத் தானே தீயிட்டுக் கொள்கிறது. இதில் இந்த மாவா பாக்கு பெரும்பங்கை ஆற்றுகிறது. காலாசாரம், கல்வி, பொருளாதாரம் என்பற்றை ஒரேநேரத்தில் குறிவைத்துத் தாக்குகிறது. இனவிடுதலை, தேசியம், போராட்டம், விடுதலை பற்றி வாயறக்கத்தும் பெருமக்களே! இப்போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதும் போராட்டமே என்பதை அறியுங்கள்” (மேலும்)

புத்தன் ஒரு சாத்தான்


தமிழர் இன்று உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் ஒரு சக்கி மிக்க இனம் எந்த இனத்துக்கும் இல்லாத மொழிஆற்றல் தமிழினத்திற்கு உண்டு, உலகிலுள்ள சகல மொழியையும் பேசக் கூடிய ஒரேயொரு சக்திமிக்க இனமான இருப்பது தமிமினம் மட்டுமே, . மேலும்

கிழக்கு மாகாணசபை – தமிழ் முஸ்லிம் உறவில் நிரந்தர விரிசலுக்கு வழி?


சண் தவராஜா

அரசுத் தலைவர் தேர்தலின் பின்னர் தமிழ்ச் சூழலில் மிகப் பெரிய பேசுபெருளாக மாறியிருந்த கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற விடயம் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினரான ஹாபீஸ் நஸீர் அஹமட் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்த பின்னர் தற்காலிகமாக ஓய்ந்திருக்கிறது. ஏற்கனவே மூன்று தடவைகள் தள்ளிப் போடப்பட்ட கிழக்கு மாகாணசபையின் கூட்டம் பெப்ரவரி 10ந் திகதி நடைபெறும்போது (இக் கட்டுரையை வாசிக்கும் போது கூட்டம் நடைபெற்றிருக்கக் கூடும்) இந்த முடிவு நிரந்தரமானதா அல்லது அது கூடத் தற்காலிகமானதா என்பது தெரியவரும். ஏனெனில் 37 பேரைக் கொண்ட மாகாணசபையில் 18 உறுப்பினர்களின் கையொப்பங்களே ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன் அர்த்தம் 19 பேர் இன்னமும் வெளியே நிற்கிறார்கள் என்பதே. ஏற்கனவே கூறியதைப் போன்று தனது கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்ற சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தீர்மானம் நிறைவேறி இருக்கிறது. ஆனால், அதற்கான விலையாக தமிழ் முஸ்லிம் உறவின் எதிர்காலம் தற்காலிகமாக பலியிடப் பட்டிருக்கிறது என்பதே உண்மை. Continue reading

மாறும் உலகில் மாறாதது மாற்றம் மட்டுமே!


அகரம் சஞ்சிகைக்கு:- சண்தவராஜா

உலக அரசியல் அரங்கில் நினைத்துப் பார்த்திராத அதிசயங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். உலகின் சென்நெறியில் மாற்றத்தை ஏற்படத்திவிடக் கூடிய அத்தகைய அதிசயங்கள் நடைபெற சில வேளைகளில் அற்பமான விடயங்களே காரணமாகக் கூட அமைந்து விடுகின்றன. கடந்த மாதத்தில் வெளிவந்த இரண்டு சேதிகள் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் நினைத்துப் பார்த்திருக்கக் கூடியவையே அல்ல என்ற அளவிற்குப் பிரமிப்பு ஊட்டுபவை. ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன நாட்டின் இருப்பை அங்கீகரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம். மற்றையது கியூப நாட்டுடன் இராஜதந்திர உறவுகளைப் பேண அமெரிக்கா முன்வந்துள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பு. Continue reading

சிங்களவருக்கு மீண்டும் சுதந்திரம் கொடுத்த தமிழருக்கு எப்போது கிடைக்கும் சுதந்திரம்?


வின்சென்ற் ஜெயன்

சிங்களமக்களின் பீதிகளை நீக்க தமிழ்மக்கள் மீது இராணு அடக்குமுறையை திணிக்க முடியும் என்றால், தமிழ் மக்களின் நியாயத்தை கூற என்ன செய்ய வேண்டும்? தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை பெற்று கொடுத்துவிட்டார்கள், சிங்கள மக்களுக்கு அதை எவ்வாறு உணர வைக்க வேண்டும்?

மேலும்

தமிழ் ஊடகவியலாளர்கள் நம் பிக்கையோடு நாடு திரும்ப!


நடந்து முடிந்த அரசுத் தலைவர் தேர்தலை அடுத்து சிறி லங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. சகல இன மக்களும் அனுபவித்து வந்த கொடுமைகள் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு ஊழல் அற்ற புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேளையில், நாட்டை விட்டு வெளியேறச் செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசாங்க அதிருப்தியாளர்கள் ஆகியோரை மீண்டும் நாட்டுக்குத் திரும்புமாறு புதிய அரசாங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. Continue reading

தமிழீழம் நிஜத்தில் உறுதிப்படுத்தப்படுமா? வரலாற்றில் மிகப் பெரிய பதிவுகளில் ஒன்று!


PRESIDENTIAL ELECTION 2015, Results mark it was came like a TamilEellam

PRESIDENTIAL ELECTION 2015, Results mark it was came like a TamilEellam PRESIDENTIAL ELECTION 2015, Results By The nation

எங்கள் தமிழீழத்தில் மலையகத்தை இணைக்க மறந்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு எமக்கு வருகின்றதே.

நடந்துது முடிந்த 2015 ஜனாதிபதி தோர்தல் முடிவுகளை பிரசுரித் “த நேசன்” வாக்குபதிவுகளை மாவட்ட ரீதியாக இலங்கை படத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருந்த போது பெறப்பட்ட உருவம் தான் இது.

இலங்கையின் புதிய ஜனரிபதிமைத்தரிபால சிறிசேன அரசு தமிழீழ மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளதை வரலாறு உறுதிப்படுத்தியுள்ளது. வரைபடத்தில் காணப்படும்

தமிழ் மக்களின் வரலாற்றில் இது மிகப் பெரிய பதிவுகளில் ஒன்று ஆகும்

PRESIDENTIAL ELECTION 2015 LIVE RESULT


PRESIDENTIAL ELECTION 2015

PRESIDENTIAL ELECTION 2015, News 1st News Tamil/English LIVE (Sakthi Tv, MTV)

PRESIDENTIAL ELECTION 08-01-2015

Department of Election Sri Lanka

PRESIDENTIAL ELECTION 2015

PRESIDENTIAL ELECTION 2015 Upali Newspapers (Pvt) Ltd.

PRESIDENTIAL ELECTION 2015

PRESIDENTIAL ELECTION 2015, தேர்தல் தொகுதி முடிவுகள். வீரகேசரி

PRESIDENTIAL ELECTION 2015

PRESIDENTIAL ELECTION 2015, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் 2015 ஒரே பார்வையில். தினக்குரல்

தேர்தல் முடிவுகள்: முதல் வெற்றியை பதிவு செய்தார் மைத்திரி.


PRESIDENTIAL ELECTION 08-01-2015

நடைபெற்று முடிந்த ஏழாவது ஜனாதிபதித் தேர்தலின் முடிவுளின் அடிப்படையில் முதலாவது முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

அதன் அடிப்படையில் யாழ்.மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவு வெளியாகியிருக்கிறது.

முதல் வெற்றியை பொது எதிரணியில் போட்டியிட் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியுள்ளார்.

மைத்திரிபால சிரிசேன – அன்னம் – 2637-
மகிந்தராஜபக்ஸ – வெற்றிலை – 466