இலங்கையில் மனித நேயமிக்கவர்கள் மீண்டும் மக்கள் முன் வருக.
நவம்பர்4, 2009 at 6:28 மாலை | In TAMIL | Leave a Commentபம்பலபிட்டடியில் கடந்த மாத இறுதி பகுதியில் கொல்லப்பட்ட பாலரட்ணம் சிவகுமார் (வயது 26) தொடர்பாக இலங்கை வாழ் மக்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயத்தை மனித உரிமை மீறல் என்று பார்ப்பதா? இன அழிப்பு என்ற ரீதியில் பார்ப்பதா?
எப்படித்தான் பார்த்தாலும் எல்லாம் ஒன்றே.
குறிக்கப்பட்ட கொலைச் சம்பவத்தை மக்கள் பலரும் நேரில் கண்டதுடன், வீடியோ பதிவு செய்து ஊடகங்கள் மூலம் பொது மக்கள் பார்வைக்கும் முன்வைக்கப்பட்டது.
குறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் (ஸ்ரீலங்காவில்) பலரும் தமது கருத்துக்களை முன்வைக்கையில் இது போன்ற மனித நாகரீகமற்ற சம்பவத்திற்காகா கவலைப்படுகின்றோம்,வெக்கமடைகின்றோம், சட்டம் நீதி ஒழுங்கு இல்லையா?, பொலிஸாரின் கடமை என்பது இதுதானா?, இரக்கமே இல்லையா? என பல்வேறான தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இது போன்றொரு சம்பவம் 2005 நவம்பர் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது
திருட்டுச் சம்பவத்தில் அகப்பட்ட மைக்னேசி தினேஷ் (வயது 20) என்பவர் யாழ் இந்துக் கல்லுரி மைதானத்தில் கூடைப்பந்தாட்ட கம்பத்தில் கட்டப்பட்டு கூடிநின்றவர்களால் கும்பிட கும்பிட அடித்துக் கொல்லப்பட்டார்.
இது போன்றொரு இன்னொரு யாழ் சண்டிலிப்பாயில் இடம் பெற்றது குறிப்பிட்ட நபர் ஒரு மனநலம் பாதிக்கப்ட்டவர் அவர்
கொல்லப்பட்டதற்கான காரணம் இது வரை தெரியாது, குறிப்பிட்ட நபரை இரவு வேளை தூக்கிச் சென்ற சிலர் கடுமையாக தாக்கி கொன்றதன் பின்னர் தற்கொலை செய்தவர் போல சடலத்தை மரத்தில் கட்டி தொங்கவிட்டனர்.
இது போன்ற வேறு பல சம்பவங்களும் இடம் பெற்றிருக்கலாம்.
யுத்தத்தை காரணம் காட்டி மனித பண்புகள் குழிதோண்டி புதைக்ப்பட்டுள்ள இலங்கையில் இன்னும் எத்தனையே விடயங்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டன.
யாழில் நடந்த தினேஷ்சின் கொலைச் சம்பவம் மக்களால் தண்டனை வழங்கப்படுவதாக கலாச்சாரம் பேணும் குழுவினால் பதாகையும் வைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த பலரும் கிரிக்கட் விக்கட்டுகளாலும், பற்றினாலும், வேறு சிலர் செயின் மற்றும் தடியினாலும் அடித்துக் கொன்றனர்,
இதனை இன அழிப்பு என்ற பட்டியலில் சேர்ப்பதா? மனித உரிமை மீறல் பட்டியலில் சேர்ப்பதா?
யாழில் புதிதாய் திருடப் பழகியவர்களும் உண்டு, ஒரு தடவை திருட்டு சம்பவம் ஒன்றில் சந்தேகிக்கப்டும் ஒருவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார், அவரிடம் கேட்டேன் ‘ஏன் திருடினீர்கள் உழைத்து தின்னலாம் தானே” என்று. அதற்கு கூறினார் உழைப்பில்லை கையில் காசு ஒன்றும் இல்லை, சாமான்கள் நினைச்சுப் பார்க்க முடியாத விலை, நான் நகை திருடவில்லை அரிசியைத்தான் எடுத்தேன் என்றார்.
இவ் உண்மைச் சம்பவத்தை கூறி திருடர்களை ஊக்குவிக்கவில்லை மாறாக நாம் கற்றுக் கொள்வதற்கும் கையாள்வதற்கும் நிறையவே உள்ளது என்பதை முன்வைக்கின்றேன்.
வடக்கு கிழக்கில் வெறுமனே திருட்டு மட்டுமன்றி பல உயிர்பறிப்பு மற்றும் மானபங்க சம்பவங்களும் நிறைவேறியதை மறுக்கவுமில்லை.
பம்பலப்பிட்டியில் கொல்லப்பட்டவர் தமிழ் பெயரை உடையவராக இருந்தாலும் அவர் பேசுவது சிங்கள மொழியே.
குறிப்பிட்ட நபரை தமிழன் என்று தெரிந்து தான் கொன்றார்கள் என்று அர்த்தப்படுத்துவது எவ்வளவு தூரம் சரியானது என்பதை சிந்திக்க வேண்டும்.
எது எப்படியிருப்பினும் விலங்கிலும் கேவலமான ஜாதி இலங்கையில் உருவாகி இருப்பதை இச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் மக்கள் முன் பார்வைக்கு வைக்ப்பட்டதினால் தான் அதற்கு பல்வேறு எதிர்ப்புக்களை மக்கள் வெளியிட்டுள்ளனர்.
இதே போன்று தான் வன்னியில் கரு முதற்கொண்டு முதியவர் வரை தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை வாழ் மக்கள் அறிந்திருந்தால் ஜனாபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், சரத்பொன்சேகாவிற்கும், கோட்டபாயவிற்கும் எதிராக குரல் கொடுத்திருப்பர்.
ஊடக அடக்கு முறையை இன்று வரை கையாள்வதால் தம்மைச் சுற்றி என்ன நிகழ்கின்றது என்பதை அறியாத மக்களாக உள்ளதுடன், கேட்டவைகளை மட்டும் நம்பிக்கொண்டு தம்மை அறியாமலே வன்முறையாளர்களுக்கு பால்வார்க்கின்றனர்.
நேர்மையான ஊடகம் இலங்கை மக்களுக்கு கிடைத்திருந்தால் இறுதியாக நிகழ்ந்ததாக கூறப்பட்ட யுத்தத்திற்கு பொரும்பான்மையான மக்கள் ஒத்துழைப்பு வழங்கியிருக்க மாட்டார்கள், அத்துடன் ஏற்கனவே காணாமல் போன அல்லது கடத்டதப்பட்டவர்களுக்கான பதிலை கூறுமாறு நிர்ப்பதந்தித்திருப்பர்.
சிவகுமாரின் கொலைச் சம்பவம் மக்களுக்கு முன்வைக்கப்பட்டதன் மூலம் மக்கள் வன்முறையை ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்டதியுள்ளனர்.
இலங்கையின் மருத்துவ மனைகளிலோ அல்லது பள்ளிகளிலோ கிடைக்காத மனித நேயம் எவ்வாறு இராணுவத்துக்குள்ளும் பொலிஸிக்குள்ளும் இருக்கும் என்பதை எதிர்பார்ப்பது.
இலங்கையில் மனித நேயம் படைத்தவர்கள் மீது சாயம் பூசி ஒதுக்கப்ட்டுள்ளனர். அவர்களை மீண்டும் மக்கள் முன்னிலையில் கொண்டுவருவதற்கு சர்வதேசம் தொடர் அழுத்தங்களை ஸ்ரீலங்காவிற்கு வழங்க வேண்டும்.
இவ்வாறான சம்பவங்களை வெறுமனே ‘தமிழ் சிங்களம்” என பிரித்துப் பார்க்கக் கூடாது இது எமது நாட்டில் தொடர்கதையான கேவலமான பண்புகள்.
சாதாரணமாக பேரூந்தில் பச்சப்பாலகருடன் பயணிக்கும் தாய்மாருக்கு கூட இருக்கை கொடுக்க மறுக்கும் தமிழ் மனிதபிறவிகள் பலபோருடன் தர்க்கித்ததுண்டு. ஒவ்வொரு சிறுவிடயத்திலிருந்தும் பிறக்கும் மனிதப் பண்புகள் எம்மிடம் அழிவடைந்து கொண்டிருக்கின்றது.
ஆகவே இன்னும் பல சம்பவங்களுக்கு வெளிநாட்டு பணம் காரணம் என்பதை பல இடங்களிலும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
வெளிநாட்டு பணம் எம் சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பாதிப்புக்களை பல பக்கங்களில் எழுத முடியும் இப்போது ஒரு உதாரணம்.
அண்மையில் முகாம்களில் எம்மக்கள் பலரும் துன்பங்களை அனுபவித்து வந்தனர், எனினும் ஒரு சிலர் பல லட்சங்களை அள்ளிக்கொடுத்து தம் உறவுகளை முகாமிலிருந்து மீட்டனர், பணம் இல்லாதவன் என்ன செய்வது?
எமது மக்கள் அவலத்திலிருந்து நிதந்தரமாக விடுபட வேண்டும் என்பதே எமது விருப்பம். அதற்காகத்தானே இவ்வளவு தியாகங்களையும்(பணத்தையும்) செய்து வந்தீர்கள்.
ஒட்டுமொத்த மக்களும் விடுபடவேண்டும் அதற்கு நாம் ஒன்றுபடுவோம் என ஏன் எம் இனத்துக்கு சிந்திக்க முடியாதுள்ளது? இங்கே நாம் செய்வது இன அழிப்பு இல்லையா? இவ்வாறு தான் ஒவ்வொரு விடயத்திலும்.
எனவே அரசு தரப்பு செய்யும் தவறுகள் அல்லது பேரினவாதிகள் செய்யும் தவறுகளுடன் எம் தவறுகளையும் எதிர்த்து போராட வேண்டும்.
தற்போது இலங்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களையும் ஆழமாகவும் நீண்டநோக்கிலும் பார்த்து விவேகமான செயற்பாட்டில் ஈடுபடுவது ஒவ்வருதமிழனுக்கும் உள்ள பாரிய கடமையாகும்.
வேதனையை அனுபவித்த இனம் தான் அதன் வலியை உணரமுடியும் என்ற அடிப்படையில் மனித நேயம் எங்கெல்லாம் மாசுறுகின்றதோ அப்போதெல்லாம் குரல் கொடுக்கும் இனமான தமிழ் இனம் சர்வதேசத்தில் தென்பட வேண்டும். அப்போது தான் எம்மினத்தின் துயர் நீங்கும்.
தற்கொலை முயற்சியில் இலங்கை நபர்-கிறிஸ்மஸ் தீவில் சம்பவம்
அக்டோபர்31, 2009 at 4:22 காலை | In TAMIL | Leave a Commentகிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை (அக்.30) இடம் பெற்றுள்ளது.
கிறிஸ்மஸ் தீவில் அமைந்துள்ள கிறீன்-1 அகதி முகாமில் உள்ள இலங்கை இளைஞர்கள் சிலரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கென அதிகாரிகள் குறிப்பிட்ட முகாமிற்கு சென்ற போது சம்பந்தப்பட்டவர்கள் தாம் திரும்பிப் போவதில்லை என அதிகாரிகளிடத்தில் எடுத்துக் கூறினர், அதிகாரிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் எதனையும் காணாததையடுத்து இளைஞர் ஒருவர் முகாமின் முன்புறமாக இருந்த மின்கம்பத்தில் திடீரென ஏறியதுடன் தூக்குக் கயிறினையும் கழுத்தில் மாட்டினார், எவராவது என்னை மீட்டக முயற்சித்தால் குதித்து தற்கொலை செய்திடுவேன் என அவர் அதிகாரிகளை மிரட்டிய அதே வேளை வேறு சில இளைஞர்கள் குறிப்பிட் மின் கம்பத்தில் ஏறியவருக்கு பாதுகாப்பு வழங்கியதுடன் கையில் வைத்திருந்த வெற்று கண்ணாடி போத்தல்களால் வீசுவேம் என பொலிசாரையும் அதிகாரிகளையும் மிரட்டியுள்ளனர்.
இச் சம்பவத்தையடுத்து கிறிஸ்மஸ் தீவு முகாம்களில் உள்ளவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக முகாம்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக முகாம்களில் இருந்து எவரையும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
அவுஸ்ரேலியாவின் தலைநகரிலிருந்து 2500கிலோமீற்றர் தொலைவில் உள்ள இத்தீவில் சுமார் எட்டு அகதி முகாம்களில் ஏறக்குறைய 700 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியா செல்லும் அகதிகளின் கோரிக்கை தொடர்பான முழுமையான விசாரனைகள் முடியும் வரை கிறிஸ்மஸ் தீவில் உள்ள முகாம்களில் தான் அகதிகள் தங்கவைக்கப்டுகின்றனர்.
ரயில்,போரூந்து சேவை இல்லாத கிறிஸ்மஸ்தீவில் சுமார் ஆயிரம் வரையான குடும்ங்கள் வசிக்கின்றனர். பொஸ்பரஸ் பிரதான வளமாக கொண்ட இத்தீவில் சிறிய விமான நிலையம், அவசரவைத்திய சேவை, பொலிஸ், இராணுவம், மற்றும் குடிவரவு அலுவலகம் போன்ற ஒருசில அலுவலங்களே உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் மேலதிக அலுவல்களை அவுஸ்ரேலியாவில் நிறைவு செய்கின்றனர்,
புலம் பெயர் மாவீரர் தினம் காலத்தின் தேவையை உணர்ந்து நடத்தப்படுமா?
அக்டோபர்27, 2009 at 5:47 காலை | In TAMIL | Leave a Comment

சுவிற்சிலாந்தில் காணப்படும் இவ் நினைவுச் சின்னம் போர்வீரர்களை நினைவு கூருகின்றது. கிரபுன்டன் மாநிலத்தில் இத் துபி அமைந்திருக்கும் வளாகச் சுவர்களில் பிற நினைவு கற்களும் உண்டு, சுவிற்சிலாந்தின் தேசிய தினம் மாநில வாரியாக கொண்டாடப்படும் போது இவ் வளாகத்துக்குள் தான் முக்கிய கொட்டகை அமைக்கப்டுகின்றது. இதே போன்ற சூழ்நிலை மாவீரர்களுக்கு ஏற்படாமல் காப்பது ஒவ்வொரு தமிழரினதும் கடமை. படம் வின்சென்ற் ஜெயன்
கடந்த வருடங்களில் இடம் பெற்ற மாவீரர் தினத்திலும் இவ் வருடத்தில் இடம் பெற இருக்கும் மாவீரர் தினம் தொடர்பான அதிக அக்கறை ஸ்ரீலங்கா அரசிற்கும் புலிகளின் செயற்பாடுகளை உற்று நோக்குவோருக்கும் உள்ளது.
புலிகள் என்றொரு அமைப்பு இருந்ததற்கு ஆதாரம் கூட இருக்கக் கூடாது என்பது தான் அரசின் நோக்கம். அதனால் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட போராளிகளின் ‘உடல்களை யாரிடமும் கையளிக்கமாட்டோம் இவைகளை வைத்துக் கொண்டு அஞ்சலி அது இது என்று நினைவுபடுத்துவதற்கும் விரும்பத்தகாதவர்கள் இங்கு வருவதை நாம் விரும்பவில்லை” என்று இராணுவப் பேச்சாளர் உதயநானயக்கார ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ‘நாடுகடந்த தழிழீழ அரசு” என்ற புதிய நிலைப்பாடு, புதிய தலைவராக அறியப்பட்ட செல்வராசா பத்மநாதனின் கைது, மற்றும் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் இல்லை என்ற சர்ச்சை, உரையை யார் செய்வார்? என்ற கேள்வி, தற்போதைய புலம் பெயர் தமிழர்களின் ஈழம் தொடர்பான நிலைப்பாடு? என பல சந்தேகங்களுக்கு விடைகாணவும், புலம் பெயர் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இனம் காணவும் இம் மாவீரர் தினம் உதவும் என எதிர்பார்க்கப்டுகின்றது.
தலைமைப் பீடத்தின் இழப்புக்களையடுத்து அதிகார ப+ர்வமான செய்தி தளங்கள் கூட இயங்க முடியாமலிருக்கையில் நாடுகடந்த தழிழீழ அரசு எந்தளவிற்கு செயற்படும் இதற்கு தமிழ் மக்கள் எந்தளவிற்கு கைகொடுப்பார்கள் என்ற மதிப்பீட்டினை இம் மாவீரர் தினம் வெளிப்படுத்தும்.
1990 களிலிருந்து மிகவும் உணர்வு பூர்வமாக தமிழர் தாயக பிரதேசம் எங்கும் நினைகூரப்பட்டுவந்தது. தற்போது புலிகள் இல்லாத நிலையில் இம் மாவீரர்களுக்கு தாயகத்தில் அஞ்சலி செலுத்தப்படுகின்றதோ இல்லையோ? புலம் பெயர் நாடுகளி;ல் வாழும் தமிழர்கள் வழமைபோன்று இம் முறையும் மாவீரர்களை நினைவுகூர்வார்கள் என்;பதில் ஐயமில்லை.
ஒட்டுமொத்த இழப்பின் பின்னரும் இடைத்தங்கல் முகாம் என்று கூறப்படும் முகாம்களில் அனுபவிக்கும் துயரத்திலிருந்தாவது சிறிது நிம்மதி கிடைக்குமா? என ஏங்கித் தவிக்கும் மக்களை தனது அரசியல் இலாப செயற்பாட்டில் அரசு ஈடுபடுத்திவருகின்றது.
முன்னாள் புலிகளுக்கு மறுவாழ்வு என்ற போர்வையில் புலனாய்வாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தல்.
மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வன்னியிலிருக்கும் மக்களை கட்டம் கட்டமாக வெளியேற்றும் நடவடிக்கையின் முதற் படியாக அங்கு தமது வாழ்வை ஆரம்பித்த மக்களை பிறந்த இடங்களை மையமாக வைத்து பிற மாவட்டங்களில் குடியமர்த்தியது.
சர்வதேச நெருககடிகளில் தப்புவதற்கென முன்னாள் புலி சிறார்களுக்கு கல்வி, வன்னிப் பகுதியில் மீண்டும் குடியேற்றம்
மீள்கட்டுமானம் என்ற போர்வையில் வன்னியில் இராணுவ கட்டுமானங்களை மேற்கொள்ளல்
என சர்வதேசத்திற்காக நாடகமாடும் வேலைகளில் அரசு அக்கறையாக இருந்து கொண்டு தமிழர்களின் உணர்வுகளையும் இச் செயற்பாடுகள் மூலமாக திசைதிருப்புவதிலும் எதிர்கால அரசியல் ஸ்திரத்திற்காகவும் மிகவும் நூதனமான தந்திரங்களை அரசு கையாளுகின்றது.
புலிகளின் இராணுவ கட்டுமானம் முற்றாக தகர்ந்துள்ள இச் சூழ்நிலையில், மீண்டும் போராட்ட உணர்வுகள் தளைத்திடாதிருக்க வன்முறையற்ற அடக்குமுறை உள்ளிட்ட அடக்கு முறைகளை அரசு கையாள்கின்றது.
ஈழ ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட தமிழக அரசியல்வாதிகள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோமாளிக்கூத்திற்கு விலைபோதல்.
செய்தியாளர்களை மறைமுகமாகவே நேரடியாகவே அச்சுறுத்தி உண்மைகளை மறைத்தல்.
எது கிடைத்தாலும் போதும் என்ற மன நிலைக்கு மக்களை பணிய வைத்து தனது பிரசாரத்திற்காக செற்ப தேவையை நிறைவுசெய்தல்
போன்ற விடயங்கள் வெளிப்படையாக உள்ளன.
இது போன்ற பல சவால்களின் மத்தியில் தான் புலம் பெயர் தமிழர்கள் தாம் நினைவு கூரவுள்ள மாவீரர் தினத்தை எதிர் நோக்க வேண்டியுள்ளது.
இதற்கிடையில் தலைவர் பிரபாகரனின் மரணத்தை மக்களுக்கு உரிய முறையில் அறிவிப்பதற்கு தழிழ் ஊடகங்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்காமையினால் தமிழர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தியதுடன், இறுதிவரை களத்திலிருந்து விலகாமல் மக்களோடு மக்களாக, போராளிகளோடு போராளியாக தன்னையும் குடும்பத்தையும் ஈழ விடுதலைக்காக அர்ப்பனித்த தங்கள் தலைவனை கொச்சைப்படுத்திய இனமாக தமிழினம் உள்ளது.
இதைவிட புலி எதிர்ப்பாளர்களின் பிரசாரம் சிறந்தது என்றே கூறவேண்டும்.
‘சுமார் முப்பதாயிரம் மக்களையும் ஏனைய போராளிகளையும் பறிகொடுத்துவிட்டு எம் தலைவன் வெற்றிகரமாக தப்பிவிட்டார்”,
‘தலைவர் உயிர் தப்புவது தான் எம் போராட்டத்தின் இலட்சியம்”, என்றது போலும் ‘போரட்ட ஆரம்ப நாட்களில் அச்சுவேலி வங்கி கொள்ளையடிப்பு சம்பவத்திற்காக தேடப்படுபவர் என்று ஸ்ரீலங்கா அரசு கூறியது. ஆகவே கொள்ளைக்காரன் தான் தப்புவதற்காக போராட்டத்தை நடத்தினான்” என்று பொருள்படும் படியான செயற்பாட்டைத்தான் புலம் பெயர் தமிழ் சமூகம் வெளிப்படுத்தியது, இதைவிடவும் பெரிய துரோகம் ஒன்றுமில்லை.
அன்புக்குரியவரின் இழப்பை ஏற்பது கடினம் தான் எனினும் தமிழ்மக்கள் இவ்விடயத்தில் கவணமாக செயற்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு தவறுக்கு மேல் தவறான செயற்பாடுகள் தடுமாற்றத்தையே உருவாக்கும்.
வன்னியில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் காரணமாக உளவியல் தாக்கத்திற்குள்ளான பலரும் உறவுகளின் இழப்பினால் உதவிகளற்றுள்ள(பாதுகாப்பு) பலரும் வன்னி தவிர்ந்த பிறமாவட்டங்களில் மீளக் குடியமர விருப்பம் தெரிவித்துள்ளனர். உறவினர்களின் பிணையின் அடிப்படையிலேயே அவ்வாறு பிறமாவட்டங்களுகளில் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். இது மக்களை வன்னியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான இலகுவழியை அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.
உளவியல் தாக்கத்திற்குள்ளான மக்களின் அவலம் தொடர் கதையாகத் தான் உள்ளது, மேலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதி என கூறப்படும் பகுதிகள் பெருமளவானவை உயர் பாதுகாப்ப வலயங்கள் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டுள்ளது.
தொடரும் பயண அனுமதி மற்றம், பொலிஸ் பதிவு நடைமுறைகள், தடுப்பு முகாம்களில் உள்ள அப்பாவிகளின் அவலம், என்ற உள்ளக கவலைகளின் மத்தியில் வாழும் தமிழ் மக்கள் மாவீரர்களின் நாளை மறந்துவிட பல காலங்கள் தேவை.
இதே வேதனையுடன் தான் முன்னைய நாட்களிலும் தாயகத்தில் மாவீரர்கள் நினைவு கூரப்பட்டார்கள், தமது பிள்ளைகளின் கல்லறைகளை கட்டியணைத்து கதறும் காட்சி எதிரியையும் கண்கலங்க வைக்கும். சாதாரண நாட்களில் பூங்கா போல காட்சியளிக்கும் மாவீரர் துயிலும் இல்லம் அமைதியான பல நினைவுகளை மீட்டும். மன அமைதிக்கென்றே கல்லறைகளை நாடிச் செல்லுவோரும் உள்ளனர்.
எனினும் தாயகத்தில் நினைவுகூரப்படும் மாவீரர் தினம் போன்ற உணர்பூர்வமான நிகழ்வாக புலம் பெயர் நாடுகளில் காணமுடியாது, தாயகத்திலிருந்து ஒருவர் நேரடியாக இந்நிகழ்வில் பங்குபற்றினால் இதனை களியாட்ட நிகழ்வு என்று தான் கூறுவர்.
இவை எல்லாவற்றுக்கும் எதிர்மாறான உணர்வை ஏற்படுத்தும் புலம் பெயர் மாவீரர் தினம் இம் முறை காலத்தின் தேவையை உணர்ந்து நடத்தப்படுமா? இம்முறை தமிழர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் மாவீரர் தினமாக அமையுமா?
தேவை இரண்டாவது எழுச்சி!
அக்டோபர்21, 2009 at 1:10 காலை | In TAMIL | Leave a Commentசண் தவராஜா
வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்டத் தாக்குதல்கள் என வர்ணிக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடி வவுனியா வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுச் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் மக்களை விடுவிக்கக் கோரி புலம்பெயர் மக்களால் நடாத்தப் பட்டுவரும் போராட்டங்கள் பரவலாக சகல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை உலுக்கிய இவ்வாண்டின் முதல் அரையாண்டில் நடைபெற்ற போராட்டங்களைப் போலல்லாது, தற்போது நடைபெறுகின்ற போராட்டங்களும், கவன ஈர்ப்பு நடவடிக்கைகளும் மிகவும் மந்தமாகவும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடனுமேயே நடைபெற்று வருகின்றன.
இன்று, வதை முகாம்களில் அல்லும் பகலும் அவலத்தைச் சந்தித்தவாறே அணுவணுவாக மரணித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றவே, அன்றைய நாளில் எமது உறவுகள் ஐரோப்பிய வீதிகளில் களமிறங்கினர். வரையறைகளையும் சட்டங்களையும் மீறி எமது உடன்பிறப்புக்களின் அவலங்களை உலகின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். கண்மூடிக் கிடந்த சர்வதேச சமூகமும், பன்னாட்டு ஊடகங்களும் அதனால் சற்று விழிப்படைந்தன.
அதன் விளைவாக எமது மக்களையும், தமிழ் மக்களின் அரசியல் தலைமையையும் காப்பதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், துரதிர்ஷ்ட வசமாக அவை வெற்றியளிக்காமல் போய்விட்டன.
எமது கண்முன்னே நடந்து முடிந்தவை கசப்பானவை, ஜீரணிக்க முடியாதவை, வாழ்நாளில் மறக்கப்பட முடியாதவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால், அதற்கும் எமது தற்போதைய செயற்பாடின்மைக்கும் சம்பந்தம் இருக்க முடியாது.
சிறி லங்கா சுதந்திரம் அடைந்த நாள் முதலாக ஈழத் தமிழினத்தை வேரோடு ஒழிப்பது எனக் கங்கணங் கட்டிச் செயற்பட்டுவரும் சிங்களப் பேரினவாதம் இன்றுவரை தனது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளவும் இல்லை, எந்தவொரு காரணத்திற்காகவும் தாமதப்படுத்தவும் இல்லை. மாறாக, விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைமை அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படும் இன்றைய சூழலிலும் கூட எஞ்சியுள்ள முக்கியஸ்தர்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொடர்ச்சியாக அது வேட்டையாடியே வருகிறது.
ஆனால், எமது மக்களை எறிகணை வீச்சுக்களிலும், குண்டு வீச்சுக்களிலும் இருந்து காப்பதற்காக இரவு பகல் என்றில்லாது ஊன் உறக்கம் இன்றிப் போராடிய நாம் இன்று அதே மக்கள் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளியே சொல்ல முடியாத அவமானங்களைச் சந்தித்து வரும் நிலையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
எமது கவலையைப் பற்றிப் பேசியவாறு எமது கடமையை மறந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். இது சரியா? இது தகுமா?
வானம் பார்த்த பூமியைப்; போன்று, ~எம் உறவுகள் எமக்கு வாழ்வு தேடித் தருவார்கள்| என்ற எதிர்பார்ப்புடன் எமது மக்கள் எம்மைப் பார்த்து நிற்கின்றார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு நாம் கூறப்போகும் பதில் என்ன?
மறுபுறம், ~புலி எதிர்ப்பு| என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிங்கள அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசி வந்தவர்கள் வவுனியா வதைமுகாம்களைப் பற்றி வாய் கூடத் திறக்காதவர்களாக உள்ளனர்.
எம்மவரை விட அந்நியரே எமது மக்களைப் பற்றித் தற்போது அதிகம் கவலைப் படுவதைப் போன்றே செய்திகள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் கவன ஈர்ப்பு நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பு குறைவாக இருப்பதற்கு மக்கள் மத்தியில் உள்ள மனச்சோர்வைத் தவிர வேறு பல காரணங்களும் இருப்பதை ஊகிக்கக் கூடியதாக உள்ளது.
முன்னைய காலங்களில், எந்தத் திசை நோக்கி நாம் செல்கிறோம் எனும் தெளிவு எம் மக்களிடம் இருந்தது. அது மட்டுமன்றி அந்தப் பாதை வெற்றியைத் தேடித் தரும் எனும் உறுதியும் இருந்தது. இன்று அவை இரண்டுமே இல்லை. அத்தோடு, யார் எதைக் கூறினாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையும் உருவாகியுள்ளது.
மேலும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும் கூட பொதுவான, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோரிக்கைகளை மாத்திரம் முன்வைக்காது தமது விருப்புக்கு ஏற்ற – முக்கியமற்ற அல்லது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத – கோரிக்கைகளையும் இணைத்துக் கொள்ளும் போது அவற்றோடு உடன்படாதோர் – மூலக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட போதிலும் – குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகின்றது. இவை தவிர்க்கப்படுவது நல்லது.
இன்றைய சூழலில் எமது மக்களிடையே மீள் எழுச்சி ஒன்று ஏற்படுத்தப் படுவது இன்றியமையாதது. எமது சோர்வும் செயற்பாடின்மையும் எதிரிக்கே உவப்பானவை.
போராட்டம் ஆரம்பமான காலப்பொழுதில் பிரசுரங்கள், ஊடகங்களை என்பவற்றை மாத்திரம் நம்பியிராது வீடு வீடாகச் சென்றே போராட்டத்துக்குப் பலம் சேர்க்கப் பட்டது. இன்றும் அதைப் போன்ற செயற்பாடுகளே அவசிய தேவையாக உள்ளது. ஏனெனில், புலம்பெயர் தமிழ் மக்களிடம் அநேக கேள்விகளும், ஐயங்களும் உள்ளன. அவற்றுக்கு விடை காணப்படுவதன் ஊடாகவே மக்களை மீண்டும் அணிதிரட்ட முடியும்.
தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நினைப்பவர்கள் இதுபற்றி அதிகம்; சிந்திக்க வேண்டும். மகாத்மா காந்தி கூறியது போன்று ~அமைதியைப் போதிப்பவன் அதனைச் சத்தமாகப் போதிக்கக் கூடாது| என்பது எவ்வளவு வாஸ்தவமோ, அதைப் போன்றே மக்களை ஒன்று படுமாறும், ஓரணியில் திரளுமாறும் கோருவோர் தாம் தம் மத்தியில் ஒற்றுமையாக, கருத்தொருமைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றோம் என்பதை நிரூபிப்பதும் அவசியமாகின்றது.
உள்வீட்டில் நடக்கும் குடுமிபிடிச் சண்டை முச்சந்தி வரை வந்துவிட்ட இன்றைய நிலையில் இது பற்றி அதிக கவனஞ் செலுத்துவது நல்லது. இந்த இடத்தில் எமது தேசியத் தலைவர் கூறிய ~நான் பெரிது: நீ பெரிது என்றிராதே: நாடு பெரிது என்று சிந்தி!| எனும் வாசகத்தை நினைவு படுத்துதல் உசிதமானது.
மறுபுறம், தமிழ்ப் புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், விடுதலை விரும்பிகளும் கூட தமிழ் மக்களிடையே மீள் எழுச்சியை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் கரம் கோர்க்க வேண்டும்.
நாம் வீழ்வதற்காக எழுச்சி பெற்றவர்கள் அல்ல. தவறுதலாக வீழ்ந்து விட்ட நாம் மீளவும் எழுச்சி பெறத் தவறுவோமாயின் வரலாறு எம்மை என்றென்றும் மன்னிக்காது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளுதல் நல்லது.
எதற்காக மீண்டும் ஒரு நாடகம். இராஜதந்திர வலையில் நாம்
அக்டோபர்18, 2009 at 5:50 காலை | In TAMIL | Leave a Commentஇந்திய பிரதிநிதிகளின் வருகை தமிழ் மக்களுக்கு நிம்மதியை ஏற்பத்தும் என்பது போல எம்மவர்கள் ஏன் இன்னும் நம்புகின்றனரோ?
தழிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுத வடிவெடுத்து 30 ஆண்டுகள் கழித்தும் இறுதி நேரத்தில் கூட கைகொடுக்காத இந்தியா இனியும் கைகொடுப்பதற்கு என்ன இருக்கின்றது என்பதை எமது சுயபுத்தியில் சிந்திக்க வேண்டும்.
திரைக் கதைகளில் வருவது போன்ற ஒரு கதாநாயகனாக இந்தியா வந்து உதவும் என்று எம்மவர்கள் கனவு காண்பது ஏனோ புதிராகவே உள்ளது.
தமிழ் ஈழத்திற்கான தேவையும் தியாகமும் எம்மக்களிடமே உள்ளது எதற்காக இந்தியாவின் கையை எதிர் பார்க்கவேண்டும்.
ஒரு நாட்டின் ஆதரவு குறிப்பாக அண்டை நாட்டின் ஆதரவு அவசியம் தான்.
பிரதமர் அமரர் இந்திராகாந்தி மற்றும் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆர் காலப் பகுதிக்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் பிரச்சனை தொடர்பாக இதயபூர்வமான தீர்வினை இந்தியா கொண்டிருக்கவில்லை. அவர்களின் கால பகுதிக்குப் பின்னர் பெரிய சக்திகளை அடக்குவதற்கு எம்மவர்களின் போராட்டத்தை பயன்படுத்தினர்.
இவ் இராஜதந்திர வலையில் சுதந்திரத்திற்காக போராட முன்வந்த எம் தாயக இளைஞர்கள் உட்பட இலங்கை இந்திய அரசியலும் சிக்கியதினால் எம் இனத்தின் விடுதலை கேள்விக்கு உள்ளாகத் தொடங்கியது.
இதனடிப்படையில் சகோதரப் படுகொலைகள் உட்பட விடுதலை பெற வேண்டிய இனம் தன்னைத்தானே சுடத் தொடங்கியது ஒரு சோகமாக தொடர, இலங்கை இந்திய ஒப்பந்த வேளையில் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி மீதான ஸ்ரீலங்கா சிப்பாயின் கொலை முற்சியை இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக மறைத்துக் கொண்டு. கொலைப் பழியை மட்டும் புலிகள் மீது சுமத்தி அதற்காக முழு தமிழ் இனத்தையும் வேடையாடுகின்றது இந்தியா.
இந்தியாவிடம் ஒரு கேள்வி மட்டும் உள்ளது. இந்தியா உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்? என்பது தான்.
இதற்கு ஏற்றாற் போல் எம்மவர்களும் இந்தியா எமது மீட்பன் என்பது போல் அறிக்கையும் விடுவர்.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அறிக்கைகளில் ‘ சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்தது”, ‘அவர்கள் மிக உன்னிப்பாக கேட்டறிந்தார்கள்”, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது”. போன்ற செற்தொடர்களை பாவித்து மக்களை ஏமாற்றுகின்றார்கள்.
அவருக்கு வாக்களிக்கவும் இவரைப் புறக்கணிக்கவும் என எமது கடைமைகளை மறந்து அண்டை நாட்டில் நடக்கும் தோர்தலில் ஈடுபடுவது எவ்வளவு பொருத்தமான விடயம்?
தழீழ மக்களுக்கு சார்பாக அண்டை நாட்டில் நடக்கும் கவணயீர்ப்புகள் உச்சாகத்தை தருபவை தான் அதற்காக அவற்றை முழுமையாக நம்பக் கூடாது.
தமிழக முதல்வர் கருணாதி தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததும் சங்கிலிப் போராட்டங்கள் நடத்தியதும் அவரின் செல்வாக்கை பரீட்சிப்பதற்கே என்று பலருக்கும் புரியவில்லை.
இதன் பின்னர் தனது பேச்சை கேட்டு ஜனாதிபதி ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார் எனக்கூறி தமிழக மக்களை ஏமாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி தானது சில மணிநேர உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக கூறிய போது வன்னி மண்ணில் வயிற்றில் இருந்த கரு உட்பட முதியவர்கள் வரை கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்தக் கோமாளியின் குழு இலங்கை சென்று திரும்பியது அல்லாமல் 15 நாட்களுக்குள் சுமார் 58ஆயிரம் மக்கள் மீளக் குடியேற்றப்டுவர் எனவும் அறிக்கையிட்டது. தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்பது போல எம் மக்கள் சிந்திக்கின்றனர்.
ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி தமிழக அரசியல் வாதிகளை ‘கோமளிகள்” என்று கூறிய வார்த்தையை நிருபித்துவிட்டார்கள்.
மேலும் அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்ட போதும் வவுனியாவில் உள்ள அனைத்து முகாம்களுக்கும் இவர்கள் செல்லவில்லை.
(இக் குழு இலங்கையில் நின்ற போது தான் தடுப்பு முகாமில் மரம் முறிந்து விழுந்து இருவர் கை மற்றும் காலை இழந்ததுடன் குழந்தை ஒன்றும் காயங்களுக்கள்ளானது.)
இக் குழுவினர் அகதி முகாம்கள் தரமாக உள்ளது என்று கூறியிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் தழிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான தங்குமிடம் மிகக் கேவலமாக இருக்கின்றது. பல வருடங்களாக பராமரிக்கப்டும் தமிழக அகதி முகாம்களில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்று அங்கு வசிக்கும் எம் உறவுகள் தெரிவிக்கின்றனர்.
மனிதப் பேரவலம் நிகழ்ந்த போது கண்ணை மூடிக் கொண்டிருந்த இந்தியா எதற்காக மீண்டும் ஒரு நாடகம் ஆடுகின்றது.
- நளினி-பிரியங்கா சந்திப்பின் மூலம் தமிழ் மக்களை திசைதிருப்பிய இந்திய இறுதியில் இராணுவ உதவிகளை வழங்கியது.
- சங்கிலி போராட்டம் நடத்தி நாடகம் காட்டிய கருணாநிதி யுத்தம் முடிவடைந்தது என கூறி தமிழக மக்களின் உணர்வுகளை அடக்கினார்.
- தற்போது தமிழக குழுவின் விஜயம்,கருணாநிதியின் 15 நாள் மீளக் குடியேற்ற புரளி?…
இலங்கையை மனித உரிமைகள் குற்றச் சாட்டு மற்றும் போரியல் குற்றத்திலிருந்து மீட்பதில் பெரும் பங்காற்றிய இந்தியா, தற்போது தழிழீழ அனுதாபிகள் என்று இனம் காணப்பட்டவர்களை தனது திட்டத்தில் பயன்படுத்துகின்றது.
இதன் மூலம் மேற்குலகில் தமிழர்களின் குரல்களை நசுக்குவதில் புதிய பாதையை வகுக்கின்றது இந்தியா.
மேற்குலகின் முன் தலைகுனிவடைந்துள்ள இலங்கை தனது நட்பை ஆசியாவில் நிலைநிறுத்த மேற்கொள்ளும் முயற்றியில் உள்ளது. இதற்கு இது போன்ற நாடகங்கள் பெரும் உதவியாக இருக்கும்.
அத்துடன் தழிழீழ அனுதாபிகள் மூலம் ஸ்ரீலங்காவும் தனது பிரசாரங்களை மேற்கொண்டு புலம் பெயர் தமிழர்களை நாட்டுக்கு வரவழைப்பதுடன், புலம் பெயர் தமிழ் சமூகத்தின் போராட்டங்களின் அரசியல் தாக்கத்தை குறைக்கவும், மேலும் புதிய முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள புலம் பெயர் தமிழ் சமூகத்தை தூண்டவும் முடியும் என்பது தான் இவர்களின் திட்டங்கள்.
அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நிகழ்வுகளாக கருதாமல் கைதட்டாமல். எதற்காக என்று சிந்திக்க வேண்டும்.
மௌனமாக இருந்தது போதும் துணிந்து பிழைகளை சுட்டிக்காட்டி இராஜதந்திர வலைகளை அறுக்க வேண்டும்.
எமது விடுதலைக்கு நாம் போராடுவதை விடுத்து அடுத்தவனை நம்பாதீர்கள்.
மரம் முறிந்து விழுந்து மூவர் காயம்-தடுப்பு முகாமில் சம்பவம்
அக்டோபர்18, 2009 at 2:09 காலை | In TAMIL | Leave a Commentவவுனியா தடுப்பு முகாமில் மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12ம் திகதி இரவு இடம் பெற்ற இச் சம்பவம் பற்றி கூறப்பட்டுள்ளதாவது. சம்பவ தினம் மழையும் கடும் காற்று வீசியதாகவும் அப்போது மரக் கிளை ஒன்று திடீரென் முறிந்து விழுந்ததில் சிறுமி உட்பட ஆண்,மற்றும் பெண் என மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இடது காலில் காயமடைந்த ஆணின் கால் முழங்கால் பகுதிக்கு கீழ் அகற்றப்பட்டுள்ளது மற்றும் பெண்ணின் வலது கை முழங்கை பகுதிக்க கீழ் அகற்றப்பட்டுள்ளதுடன் சிறுமியின் இரண்டு விரல்களும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
சத்துருக்கொண்டான் படுகொலையின ் 19ஆவது நினைவு
அக்டோபர்7, 2009 at 9:29 மாலை | In TAMIL | Leave a Commentசத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினப் படங்களை எனக்கு இப்போதுதான் பதிவேற்றம் செய்யமுடிகிறது என்பதற்குக் கவலை கொள்கிறேன். சத்துருக்கொண்டான் படுகொலை என்றவுடன் எனக்கு அந்தப் படுகொலை குறித்து ஞாபகம் வருகிறதோ இல்லையோ என்னுடைய பத்திரிகைத்துறை ஆசிரியர் அனைவராலும் தராக்கி என அழைக்கப்படுகிற சிவாராம் பற்றியே ஞாபகம் வரும்.

நான் மட்டக்களப்பில் தினக்கதிர் பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளனாக வேலை செய்து கொண்டிருந்த வேளை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசிப் பகுதியில் ( திகதி சரியாக ஞாபகத்தில் இல்லை) தினக்கதிரின் ஆசிரியராக இருந்த றுசாங்கன் அண்ணா ஒரு வாரமளவில் கொழும்புக்குச் சென்றிருந்தார். அப்போது சிவராம் என்னை அழைத்து சத்துருக்கொண்டான் படுகொலை பத்தாவது ஆண்டு வருது அது பற்றி ஒரு கட்டுரை எழுது என்று சொன்னார்.
அன்றைய நாளே சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்துருக்கொண்டான் புறப்பட்டேன். அப்போது எனக்கு சத்துருக் கொண்டான் படுகொலை என்பது ஒன்று நடந்ததாக மட்டுமே தெரியும். ஆனாலும் எனக்கிருந்த துடிப்பு அதைப் பற்றி முழுதாக எழுதி விட வேண்டும் என்று தூண்டி விட்டது. என்பதை விடவும் அவர் (சிவாராம் என்று அவருடைய பெயரை மரியாதை கருதி அடிக்கடி உச்சரிப்பதில் எனக்கு இஸ்டமில்லை என்பதால் அவர் என்று குறிப்பிடுகிறேன்) சொல்லியது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது.
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாளான 09.09.க்கு முதல் நாள் நான் எழுதிய கட்டுரை பக்க வடிவமைப்பு முடிந்த வேளை அதனை வாசித்துப்பார்த்த அவர் இன்னமும் போதாது மீண்டும் அங்கு போய் தகவல் திரட்டு என திரும்பவும் சத்துருக்கொண்டான் அனுப்பினார்.
றுசாங்கன் அண்ணா வரும் வரை தினக்கதிரின் பிரதான வேலைகளை அவரே பொறுப்பேற்று நடத்தினார். அந்த குறிப்பிட்ட நாட்களில் எங்களுக்கு அவர் பல விடயங்களை கற்றுத் தந்தார்.
அது போல அவர் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வரும் போதெல்லாம் எங்களுடைய தினக்கதிர் அலுவலகத்திற்கு வருவது வழக்கம்.
அவருடைய பக்குவப்படுத்தல்கள் உண்மையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு பத்திரிகையாளனை உருவாக்குவார் என்பதனைக் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. ஊக்கப்படுத்துவதும் கற்றுக் கொடுப்பதும் ஒரு பத்திரிகை ஆசிரியரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
சத்துருக்கொண்டான் படுகொலை போல பல விடயங்கள் அவருடன் இணைந்து செய்யப்பட்டிருந்தாலும் அவருடைய நினைவுகள் மீட்கும் போது சத்துருக் கொண்டான் படுகொலை வந்து விடுகிறது.
சிவராம் பற்றி அவருடைய மறுபக்கம் பற்றித் தெரிந்தவர்கள் முன்வைக்கி்ன்ற விவாதங்கள் எனக்கு இரண்டாம் பட்சமானவை எனக்குத் தெரிந்தவகையில் ஒரு பத்திரிகைக்காரனாகவே அவரைத் தெரிந்து கொண்டேன். அவ்வாறு இறந்தும் போனார் நினைத்துப் பார்க்கையில் நிச்சயமாக அவருடைய நினைவுகள் நிசப்தமாகா நிஜங்களாகவே இருக்கின்றன.
அக்டோபர்2, 2009 at 7:49 மாலை | In TAMIL | Leave a Comment
Does India care about its own citizens in the south?
By Satheesan Kumaaran
As days go by, hundreds of fishermen who reclaim their homes in the southern part of the Indian State of Tamil Nadu are harassed and tortured. So far, over 500 fishermen have been killed by none other than the Sri Lankan military. India, as a sovereign nation with over 1 billion people of whom nearly 75 million are Tamils, are being taken for a ride by the Sri Lankan Navy after India handed over the island of Kachchatheevu to Sri Lanka. Kachchatheevu is located in the middle of Sri Lankan and Indian waters. The price for donating the island to Sri Lanka was the death of over 500 Indian-born Tamils who fish for their livelihood.
When the Sri Lankan State, which killed Indian citizens, appealed for help to nab LTTE vessels in the Indian Ocean, India sent warships, choppers, and warplanes to identify, and eventually helped to destroy, the vessels. Yet India failed to punish the perpetrators who killed the Indians, so in other words, India was supporting the Sri Lankan Navy jut as a prize for killing Indians.
A weak State relying on China, Pakistan, Sri Lanka and others
When the sons of Indian leaders mistakenly flew into the skies of India’s enemies such as Pakistan, these countries took serious actions against India. India countered the actions by merely issuing statements condemning the enemy countries. However, the weak State of India, with over 1 billion people, failed to stand up as a responsible model State and create confidence among the Indians by treating the enemies with serious counter actions. For example, most recently, the Chinese military managed infiltrated into Indian Territory and placard the Chinese flag and wrote China on the stone on the high peak of the mountain. Indian opposition parties urged the central government to take actions against China. However, the Indian ruling party issued statements that they would take appropriate actions, but the statements are just to whitewash the Indian general public. India mouths platitudes, but does not take actions against the perpetrators. Other than Kargil in Kashmir, India failed to create such confidence among the Indians, and the Kargil War, too, gained nothing militarily to India.
But, in fact, India is doing greater business with its rivals. Indian currencies are printed in Pakistan and China and the Indian central government allows the import of Pakistani and Chinese products while these countries import much fewer products from India. However, the fact is that Pakistani and Chinese intelligence agents hire many Indians for spying within Indian soil. However, despite having knowledge of the events, the Indian government does not take action.
All this exposes India as a weak State while others such as Pakistan and China become superior in the region. Another classic example is that Sri Lanka is an island in the Indian Ocean with nearly 20 million people, while India, with the so-called record of being the largest democracy in the world, collaborates with a government conducting a genocide war in Sri Lanka.
Sri Lankan President Rajapaksa openly declared the Tamils as terrorists and he would not let the Tamils call themselves Tamils, Eelam, etc. And India does not care. However, the stand maintained by India is understandable, but when it deals with supporting the terrorist State, it shows India as a weak State that has lost the faith of being a greater democracy in the world and as a superpower in south Asia. When thousands of people died on the island of Sri Lanka, India did nothing to prevent it. In fact, India did not even condemn Sri Lanka for launching military attacks on civilian targets while many western countries issued statements condemning the Sri Lankan State to stop military operations against Tamils. However, India was watching to the end and finally, after 30,000 Tamils were killed and nearly 280,000 were sent to Nazi-style camps, India issued statements that they would help resettle the displaced population. All these actions prove that India does not care about humanity.
India has set aside the path that their forefathers taught. Even when Indians were killed by their neighbouring State, India remained silent. Further, when hundreds of Indian-origin people were killed in Malaysia and Australia in the recent past, India took little actions to prevent such attacks despite that the Indian central government has established a ministry for expatriate Indians. The ministry only cares about collecting revenue and their skills imported back to India, but India does not come into assistance when they face difficulties in foreign countries.
Tamils are untouchables to New Delhi
Unlike other communities, the Tamil community is untouchable and indeed, when even Tamils in Sri Lanka died, India did not take any actions to stop the massacres. Even when over 500 Indian fishermen were killed, India did not give a strong voice condemning the Sri Lankan State to stop such an act. Further, just to cool down the sentiments of politicians in Tamil Nadu, New Delhi merely issued statements that they would take actions to stop such actions in the future. However, the words were never heeded by Sri Lanka and in retaliation, India did not take actions against Sri Lanka to protect its citizens.
The recent events coming from the southern shores of India are bitter. Most events taken by Sri Lankan naval officers include intercepting Indian fishermen and physically and mentally torturing them in the middle of the sea, stripping them naked, and driving them forcefully back to Tamil Nadu shores. The Sri Lankan Navy stopped 19 fishing trawlers and tortured the fishermen and damaged their property, including their nets and more often they kill the fishermen, which is what happened last week. Often the dead bodies reached the Sri Lankan and Indian shores after several weeks of the incidents. All these events were taking place when the LTTE was active. The Sri Lankan Navy’s excuse was that the Indian fishermen supported the LTTE to fight the Sri Lankan armed forces to carve out an independent State for Eelam Tamils. Many of these events occurred while the Sri Lankan Navy trespassed into India waters. Even Sri Lanka does not see these fishermen as human beings and Sri Lanka knows that these people are harmless. They are trying to make a decent living out of the fishing catches. Further, it is difficult to distinguish Indian or Sri Lankan waters as there is no boundary line between the two countries, and therefore, it is possible for both the Indian fishermen and the Sri Lankan Navy to cross each other’s waters illegally, but taking such brutal violence is not acceptable at all by any means.
There is no doubt that the excesses of Sri Lankan Navy are violations of all international norms and rules. But India has failed to stop the Sri Lankan forces that manifests its weakness and is step-motherly outlook towards Tamil people.
Even India, who only issued statements once demands were raised from Tamil Nadu to protect Tamil Nadu fishermen, was not serious, but offered very cautious and soft statements because India does not want to antagonize Sri Lanka whatsoever. Also, it is obvious that Sri Lanka has nothing to offer India in return because Sri Lanka is a failed State with a track record of human rights abuses and their leaders are on the brink of facing genocidal war crimes, which have been highly condemned by the western world. Also, Sri Lanka has natural alliances with Iran, Pakistan, and China, and has been issuing direct threats to many other democratic countries, such as Britain, which is considered the school of political culture among many nations in the world.
The end result is that the Tamil race will be wiped out eventually. Certainly, Sri Lanka will wipe out the Tamil race from the island. Also, India will indirectly help foreigners kill their own Tamil citizens and India is doing everything possible to make the Tamil race silently extinct. Middle and upper class Tamils will sing the United India national anthem without knowing the facts. All these people want is a fair living and they do unaware of the brethrens’ plight. As a result, they fail to recognize their enemies who are eliminating the Tamil race from the bottom up.
(The author can be reached at e-mail: satheesan_kumaaran@yahoo.com)
‘வன்னி ரெக்’ நிறுவனத்தின் பணிப்பாளர் தயாபரராஜா கொழும்பில் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைதாகி படுகொலை
செப்டம்பர்25, 2009 at 2:02 காலை | In TAMIL | Leave a Comment[வியாழக்கிழமை, 24 செப்ரெம்பர் 2009, 08:12 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவரும், ‘வன்னி ரெக்’ நிறுவனத்தின் பணிப்பாளருமான கணினிப் பொறியியலாளர் கதிர்வேல் தயாபரராஜா சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மிகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ.ரி.ரி.பி.ஓ. என்ற அமெரிக்க அரசால் வரி விலக்களிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், குற்றப் புலனாய்வுத்துறையினரால் அவிசாவளையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட தொண்டு நிறுவனம் சிறிலங்காவிலும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர், வாரிவளவைச் சொந்த இடமாகக் கொண்டுள்ள தயாபரராஜா, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள் பிறந்தவர் ஆவார்.
சிறிலங்காவில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் கல்வி கற்று பட்டம் பெற்ற இவர், ‘வன்னி ரெக்’ நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றி வந்திருக்கின்றார்.
சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர், செப்ரெம்பர் மாதம் 13 ஆம் நாள், சட்டவிரோதமான முறையில் சுடப்பட்டதாகத் தெரிகின்றது.
கடுமையான காயங்களுடன் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இவர், செப்ரெம்பர் மாதம் 15 ஆம் நாள் மரணமடைந்தார்.
ஆற்றல் மிக்க ஒரு கணினிப் பொறியியலாளரான இவர், ‘வன்னி ரெக்’ நிறுவனத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றியதன் மூலம், வன்னிப் பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதில் பெரும் பணியாற்றியுள்ளார்.
தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட உடனடியாகவே ‘வன்னி ரெக்’ நிறுவனத்தில் இணைந்துகொண்டார்.
வன்னிப் பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையை வளர்ப்பதற்காக செயற்பட்ட ஒரேயொரு அமைப்பாக இதுவே இருந்துள்ளது.
வன்னியில் உள்ள இளைஞர்களுக்கு கணினி மென்பொருட்களை உருவாக்குவதில் குறுகிய காலத்தில் சிறப்பான பயிற்சிகளை வழங்கிய இவர், தனது கடின உழைப்பால் அமெரிக்காவில் இருந்தும் பல செயற்திட்டங்களைப் பெற்றிருந்தார்.
இவரின் கொலை தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.
ஈராக் ஊடகவியலாளர் விடுதலையில் மறைந்திருக்கும் உண்மை
செப்டம்பர்22, 2009 at 11:10 காலை | In TAMIL | Leave a Commentஅதிரன்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் கலந்து கொண்ட வேளை அவர் மீது சப்பாத்து வீசிய ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி ஒன்பது மாத சிறைத் தண்டனையின் பின்னர் செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஈராக்கிற்கு விஜயம் செய்திருந்த வேளை ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார். இதில் கலந்து கொண்ட ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி, புஷ் மீது சப்பாத்துக்களை வீசினார். கைது செய்யப்பட்ட இவருக்கு ஈராக் நீதிமன்றம் மூன்று வருட சிறைத் தண்டனையை விதித்தது.
இத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்த போது ஒரு வருட சிறைத் தண்டனையாக அது குறைக்கப்பட்டது.. அவருடைய சிறை நடத்தை காரணமாக ஒன்பது மாதகாலத்தில் விடுவிக்கப்பட்டார்.
முன்நடார் அல் செய்திக்கு புஷ்மீது சப் பாத்துக்களை வீசியமைக்காக அரபு நாடு களிலிருந்து ஏராளமான பரிசுப் பொருட்களும் வாழ்த்துக்களும் வந்து சேர்ந்தன. அராபிய செல்வந்தக் குடும்பங்களில் இவருக்கு பெண் கொடுக்கவும் ஏராளமானோர் முன் வந்தனர். கோடிக் கணக்கில் இவருக்கு கிடைத்துள்ள பரிசுப் பொருட்கள் நிதிகளை ஈராக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பங்கிடவுள்ளதாகவும் அநாதைகள் பராமரிப்பு இல்லமொன்றை நடத்தப் போவதாகவும் முன்நடார் அல் செய்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க உளவுத்துறையால் தனது வாழ்க்கைக்கு ஆபத்து இருக்கிறது என்கிறார் முன்நடார் அல் செய்தி. சிறையிலடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் கடும் சித்திரவதைக்குள்ளானதாக தெரிவித்துள்ள முன்நடார் அல் செய்தி விடுதலையான பின்னரும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளாளார்.
விடுதலையாகி வந்த முன்நடார் அல் செய்திக்கு ஈராக்கில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இதன் போது நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தான் சிறையில் எதிர்கொண்ட இன்னல்கள் கொடுமைகள் பற்றி விளக்கியிருக்கிறார் முன்நடார் அல் செய்தி.
குளிர்ந்த நீரில் அமிழ்த்தப்பபட்டு வைக்கப்பட்டதுடன் மின்சாரத் தாக்குதலுக்குள்ளானதாகவும் சவுக்கினால் மிகப் பலமாக அடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். செருப்பு வீசியமைக்காக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் இந்தத் தடவை அவருக்கான தண்டனைக்காலம் முடிவடைந்து விட்டாலும் அரசுக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியதாக தன்மீது அமெ ரிக்காவின் உளவுத்துறை போலிக் குற்றங்களைச் சுமத்த வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார்.
எனவே இதனால் எனது விடுதலை எனக்கு சுதந்திரத்தையளித்துள்ளதாக நினைக்க முடியாத விடுவிப்பாக நினைக்கும் ஈராக்கிய ஊடகவியலாளர் எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம். என்ற அச்சத்துடன் காணப்படுகிறார்.
சிறையில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துவிட்டு வெளியில் வந்திருக்கும் முன்நடார் தன்னைக் கொடுமைப்படுத்திய ஈராக் இராணுவ அதிகாரிகளை தேவையேற்படும்போது அவர்களின் பெயர்கள் அடங்கலாக தெரியப்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.
ஈராக்கினுள் அமெரிக்க இராணுவம் உள்நுழைந்து செய்து வந்த அட்டகாசங்கள் ஒழிந்து விட்டன என்று சொல்வதற்கு சந்தர்ப்பம் இல்லை. இதற்கு ஈராக்கின் ஊடகவியலாளரின் கருத்துகள் நல்ல உதாரணமாகும்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ் ஆரம்பித்து வைத்த ஈராக் யுத்தம் ஒபாமா ஆட்சிக்கு வந்த பின்னரும் முடிந்து விடுவதாகத் தெரியவில்லை. இதற்கு தினமும் அங்கு நடந்த வண்ணமிருக்கிற குண்டுத் தாக்குதல்கள் உதாரணமாகும்.
மிகக் கொடுமையான அழிவுகளைச் சந்தித்துவிட்ட ஈராக்கிய வரலாறில் அமெரிக்காவின் கொடுமைகள் மறக்க முடியாதவை என்று ஈராக்கிய மக்கள் கவலை கொள்கின்றனர். இருப்பினும் அரபு நாடுகளின் மீது ஆக்கிரமிப்புக்களைச் செய்து வரும் அமெரிக்காவுக்கு எதிராக அல் கொய்தா அமைப்பினரும் அதன் கூட்டணியினரும் நடத்துகின்ற போராட்டங்களுக்கு நீண்டகாலத்திலாவது பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனையோ வேண்டத்தகாத நிலைமைகளை அனுபவித்துவிட்ட பின்னரும் அரபு நாடுகளைத் தமக்கு அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
அதிகாரத்திலுள்ளவரை நடக்கிற அட்டகாசங்கள் போராட்டங்களால் கட்டுப்படுத்தப்படலாம் என்பதற்கு அமெரிக்காவின் செயற்பாடுகளும் அதற்கெதிராக நடந்து வருகின்றன அல் கொய்தாவின் போராட்டங்களுமே உதாரணமாகும்.
புஷ்ஷினுடைய நடத்தைகளுக்கு பல தடவைகளில் கொடுக்கப்பட்ட பதிலடிகள் கொடுக்கப்படும் தண்டனைகளால் மறைக்கப்பட்டு விடாது என்பதனையே ஈராக்கின் ஊடகவியலாளர் கைதும் அவரது விடுதலையும் காட்டி நிற்கிறது.
17.09.09
மலேசியா சிறையில் இலங்கை தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்
செப்டம்பர்22, 2009 at 3:21 காலை | In TAMIL | Leave a Commentமலேசியா நிருபர்
மலேசியாவில் சிறையில் இருக்கும் இலங்கை தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் கடைப்பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா செல்ல தயாரக இருந்த இலங்கையர்களை மலேசியா காவல் துறையினர் கடந்த இருவாரத்திற்கு முன்னர் கைதுசெய்தனர். இவர்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்புவது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இலங்கை தூதுவராலய அதிகாரிகள் இக் கைதிகளை சந்தித்து நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தாம் செய்ய முன்வருவதாகவும் தெரிவித்தனர்.
நாட்டுக்க திரும்பி அனுப்பினால் தாம் உயிருக்க உத்தரவாதமில்லை என உறுதியாக தெரிவித்து அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
கடந்த இருவாரங்களாக தொடரும் தமது சிறையிருப்பை எதிர்த்து சிறைக்குள் உண்ணாவிரதத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.
குழந்தைகள் உட்பட சுமார் 117 இவ்வாறு சிறையில் இருப்பதாகவும் இவர்களை பார்வையிடுவதற்கு வரும் 24 திகதி ஐ.நா அதிகாரி பார்வையிடவுள்ளாளர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மலேசிய அரசு மற்றும் மலேசியாவில் செயற்படும் ஐ.நா அலுவலகங்கள் இலங்கை அகதிகள் தொடர்பில் அக்கறை செலுத்துவதில்லை என இலங்கையர் பலரும் தெரிவிக்கின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகள் உண்ணா விரதம்
செப்டம்பர்21, 2009 at 9:12 மாலை | In TAMIL | Leave a Commentஅதிரன்
பொதுமன்னிப்பு மற்றும் விசாரணைகளை துரிதப்படுத்துதல் போன்ற தமது கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்காதமையினால் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கப் போவதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இதன் முதற் கட்டமாக வெலிக்கடை சீ. ஆர். பி பிரிவிலுள்ள 63 அரசியல் கைதிகள் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக புலிகளால் கூட்டப் பட்ட கூட்டமொன்றில் வைத்து சக தமிழ் கட்சியொன்றின் துண்டுபிரசுரம் கனடாவில் வினியோகம்
செப்டம்பர்21, 2009 at 4:29 மாலை | In TAMIL | Leave a Comment-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-கனடா
நேற்றையதினம் கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழம் தொடர்பான ஆய்வு கூட்டம் புலிகளின் கனடா கந்தசுவாமி கோயில் ஆலய மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இவ் கூட்டத்திற்கு சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா? என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் ஒன்றை கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் வினியோகம் செய்துள்ளனர். ஜனநாயக முறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து புலிகளால் நடாத்தப்பட்ட மேற்படி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை குழப்ப வேண்டாம் என்று புலிகள் கோரியபோது அங்கே வந்திருந்த புளொட் உறுப்பினர்களும் நாங்களும் ஜனநாயக முறையில் எமது கருத்துக்களை மக்களுக்கு தெளிவூட்டவே வந்துள்ளோம் என்று தெரிவித்து தாங்கள் கொண்டு வந்த துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வினியோகம் செய்தனர். Continue reading முதன்முறையாக புலிகளால் கூட்டப் பட்ட கூட்டமொன்றில் வைத்து சக தமிழ் கட்சியொன்றின் துண்டுபிரசுரம் கனடாவில் வினியோகம்…
வாகனம் வித்துக்குள்ளானதில் அமைச்சர் முரளிதரனுக்கு காயம்
செப்டம்பர்20, 2009 at 7:00 மாலை | In TAMIL | Leave a Commentவீரகேசரி இணையம் 9/20/2009 7:11:11 PM -
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விபத்தில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார். எனினும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரும் அவரது வாகன சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியாவில் இன்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் முரளிதரன் அங்கிருந்து ஹெலிக்கெப்டரில் கொழும்பிற்கு வருகைதந்துள்ளார்.
ஹெலிகெப்டர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மைதானத்தில் தரையிறங்கியது அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அமைச்சர் வீட்டிற்கு சென்ற வேளையிலேயே இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சரின் வாகனத்தின் மீது எதிரே வந்த பஸ் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அமைச்சருக்கு கால்களிலும் தலையிலும் சிறு காயங்கள் ஏற்பட்டதுடன் மெய்பாதுகாவலர் மற்றும் சாரதிக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளது.
திருமலை தம்பலகாமத்தில் நேரடி மோதல்! போராளிகள் இருவர் வீரச்சாவு!
செப்டம்பர்20, 2009 at 1:31 காலை | In TAMIL | Leave a Commentதிருகோணமலை தம்பலகாமத்தில் கடந்த 05-09-2009 அன்று இரவு 8.15 மணிக்கு சிறீலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் போது போராளிகள் இருவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.
மோதலின் போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான லெப்.கேணல் பொழிலன் (சிவகுமார்), கப்டன் சசியன் (யோகரட்ணம் சசிகரன்) ஆகியோரே வீரச்சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயக விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்த இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றனர்.
புதினம் செய்திகள்
செப்டம்பர்18, 2009 at 9:33 மாலை | In TAMIL | Leave a Comment| சம்பூரில் மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்து |
| [வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 08:04 பி.ப] [நி.விசுவலிங்கம்] |
| திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் இந்தியா அமைக்க உள்ள அனல் மின் நிலையம் தொடர்பிலான இருதரப்பு ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் கையெழுத்திடப்படும் என மின் மற்றும் சக்தித்துறை அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. [விரிவு] Continue reading புதினம் செய்திகள்… |
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான
செப்டம்பர்18, 2009 at 7:00 மாலை | In TAMIL | Leave a Comment-பிரதமரை நேரில் சந்தித்து தயாநிதி வலியுறுத்தல்-
இலங்கை அரசினால் அகதிமுகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் புணர்வாழ்வுப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வைச் சேர்ந்த இந்திய மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்கை, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இன்று காலை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உடன் இருந்தார்.
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான பணிகள் தொடங்கப்பட மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் தயாநிதி மாறன் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மாறனிடம் பிரதமர் இச்சந்திப்பில் உறுதியளித்ததாக தி.மு.க. தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து
செப்டம்பர்18, 2009 at 6:53 மாலை | In TAMIL | Leave a Comment-விஜயகாந் அறிவிப்பு-
தமிழக கடற்தெழிலாளர்கள்; மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களைக் கண்டித்து எதிர்வரும் 29 திகதி இந்தியத் தலைநகர் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தனது தலைமையில் கட்சித்தொண்டர்கள் உடபட பல்வேறு தரப்பினரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் விஜயகாந் தெரிவித்துள்ளார்.
தமிழக கடற்தெழிலாளர்களின் துயரத்தை நாடெங்கும் தெரியப்படுத்துவதற்காகவே இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ள விஜயகாந்,
தமிழக கடற்தெழிலாளர்களை காக்கும் விடயத்தில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் மெத்தனமாக நடந்து வருவதாக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
போரின் இறுதி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் பலி: நேரடி சாட்சி
செப்டம்பர்18, 2009 at 1:56 காலை | In TAMIL | Leave a Comment[வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2009, 03:38 பி.ப ஈழம்] [நி.விசுவலிங்கம்]
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரச படையினர் நடத்திய இறுதி வலிந்த தாக்குதல்களின் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று போரின் நேரடி சாட்சியான தமிழ்வாணி ஞானகுமார் கூறியுள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த இவர், போரின்போது வன்னிக்குள் சிக்கிக்கொண்டிருந்தார். நான்கு மாதங்கள் கழித்து பிரித்தானியா திரும்பியுள்ள அவரை ‘த கார்டியன்’ நாளேடு நேர்கண்டு வெளியிட்டுள்ளது.
அதன் தமிழ் வடிவம் வருமாறு: Continue reading போரின் இறுதி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் பலி: நேரடி சாட்சி…
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.










































































